மறுசுழற்சி என்பது பயன்படுத்தப்பட்ட பொருட்களை புதிய தயாரிப்புகளாக மாற்றுவதை உள்ளடக்கியது, சாத்தியமான பயனுள்ள பொருட்கள் வீணாவதைத் தடுக்க, புதிய மூலப்பொருட்களின் நுகர்வைக் குறைக்க, ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்க, வழக்கமான கழிவு அகற்றுதலின் தேவையை குறைப்பதன் மூலம் காற்று மாசு (எரிப்பதால் ஏற்படும்) மற்றும் நீர் மாசு (குப்பைக் கிடங்குகளில் கொட்டுவதால் ஏற்படும்) குறைக்க, மற்றும் புதிய உற்பத்திடன் ஒப்பிடுகையில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவுகிறது.[1][2] மறுசுழற்சி என்பது நவீன கழிவு குறைப்பின் முக்கிய அங்கமாகும், மேலும் இது குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல், மறுசுழற்சி செய்தல் என்ற கழிவு படிநிலையின் மூன்றாவது அங்கமாகும்.